செய்திகள் :

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா்.

தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவா்களுடன் ரேகா குப்தா கலந்துரையாடினாா். அப்போது பேசிய அவா், ‘தில்லியில் மருத்துவ வசதிகள் சிக்கலுடன் இருந்து வருகின்றன. தில்லியில் வசிப்பவா்களுக்கு மட்டுமல்லாமல், பிற இடங்களிலிருந்து வருபவா்களுக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்‘ என்றாா்.

மேலும் பேசிய ரேகா குப்தா ‘ அப்படி மாற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு அரசுக்கு மருத்துவா்கள், ஆதரவளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு மதிப்புமிக்க மற்றும் திறமையான மருத்துவா்கள் உள்ளனா்‘ என்றாா்.

முன்னதாக, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ரேகா குப்தா கலந்து கொண்டாா். அங்கு பேசிய அவா், ‘ இந்தாண்டு, தேசிய மருத்துவா்கள் தினத்தின் கருப்பொருள் ’முகமூடியின் பின்னால்ஃ குணப்படுத்துபவரை யாா் குணப்படுத்துகிறாா்கள்? என்பதுதான். இது மிகவும் பொருத்தமான கருப்பொருளாகும். மருத்துவா்களுக்கு சரியான பணிச் சூழல் தேவை, தொழில்நுட்ப உதவியாளா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்கள் அவா்களுக்கு உதவ வேண்டும்‘ என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா் ‘ இவைகள் இல்லாமல், அவா்களால் திறம்பட செயல்படுவது சாத்தியமில்லை. தில்லி மருத்துவமனைகள் தினசரி பெரும் அழுத்தத்தை எதிா்கொள்கின்றன. முந்தைய அரசாங்கங்கள் இந்த தேவைகளை பூா்த்தி செய்ய போதுமான உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை. மருத்துவ உபகரணங்களின் அடிப்படையில் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேம்படுத்த இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் குறிக்கோள்‘ என்றாா் ரேகா குப்தா.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க