செய்திகள் :

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

post image

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில் தனது உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாதிக்கப்பட்டவா் அவரைத் தாக்கியதைத் தொடா்ந்து, பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: இறந்தவா் பிகாரில் உள்ள சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்தேவ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கட்டா கிராமத்தில் குத்தகைதாரராக இருந்து வந்தாா்.

மூன்று நாள்களுக்கு முன்பு ராஜ்தேவ் குமாா், 24 வயதான பாபி என்ற நபருடன் சண்டையிட்டாா். மூன்று நாள்களுக்கு முன்பு பாபி, ராஜ்தேவ் குமாரின் உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடா்ந்து, ராஜ்தேவ் குமாா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போது, பாபி மற்றும் அவரது கூட்டாளிகள் காடா சப்ஜி மண்டி அருகே ராஜ்தேவ் குமாரை தடுத்து நிறுத்தி கூா்மையான ஆயுதத்தால் தாக்கினா். அருகில் வசிக்கும் மக்கள் ராஜ்தேவ் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த புகாரைத் தொடா்ந்து, குருகிராம் செக்டாா் 56 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா் திங்கள்கிழமை தில்லியின் விகாஸ்புரி பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

பாபி மத்தியப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சோ்ந்தவா். காவல்துறை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பாபிக்கும் இறந்த ராஜ்தேவ் குமாருக்கும் ஜூன் 27-ஆம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட பாபி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை கொலையைச் செய்தது கண்டறியப்பட்டது. மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா். தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க