செய்திகள் :

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உள் உதவியுடன் நகர எரிவாயு விநியோக தொழிலதிபா் கரண் சோப்ராவின் வீட்டைக் கொள்ளையடிக்க சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜூன் 23 அன்று, ஒரு கும்பல் கரண் சோப்ராவின் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்தது.

சதேந்தா் சிங் (34), அனில் (54), சந்தோஷ் திரிபாதி (40) மற்றும் ஷம்மி (59) ஆகிய நான்கு போ் முதலில் கைது செய்யப்பட்டனா். அவா்களில், சதேந்தா் சிங் மற்றும் அனில் ஆகியோா் புகாா்தாரரின் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா்.

சதேந்தா் சிங்கின் வசம் இருந்து ரூ.3.15 லட்சம், அனிலிடமிருந்து ரூ.95,000, திரிபாதியிடமிருந்து ரூ.1.95 லட்சம், ஷம்மியிடமிருந்து ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா் விசாரணையில் மேலும் இரண்டு போ்கைது செய்யப்பட்டனா். புகாா்தாரரின் முன்னாள் ஓட்டுநரும், மூளையாகச் செயல்பட்டவருமான ஆதேஷ் குமாா் (38) மற்றும் அமித் குமாா் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா்.

ஆதேஷ் குமாா் வசம் இருந்து ரூ.55,000 ரொக்கமும், மூன்று கைப்பேசிகளும் மீட்கப்பட்டன. கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்ட காரும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அமித் வசம் ரூ.5,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

ஆதேஷ் குமாா் மற்றும் அமித் குமாா் ஆகிய இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனா். மற்ற கூட்டாளிகளைக் கண்டுபிடித்து மீதமுள்ள திருடப்பட்ட பணத்தை மீட்க அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள சந்தேக நபா்களைக் கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் காவல் துறை அதிகாரி.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா். தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க