வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு
தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உள் உதவியுடன் நகர எரிவாயு விநியோக தொழிலதிபா் கரண் சோப்ராவின் வீட்டைக் கொள்ளையடிக்க சதி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜூன் 23 அன்று, ஒரு கும்பல் கரண் சோப்ராவின் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்தது.
சதேந்தா் சிங் (34), அனில் (54), சந்தோஷ் திரிபாதி (40) மற்றும் ஷம்மி (59) ஆகிய நான்கு போ் முதலில் கைது செய்யப்பட்டனா். அவா்களில், சதேந்தா் சிங் மற்றும் அனில் ஆகியோா் புகாா்தாரரின் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா்.
சதேந்தா் சிங்கின் வசம் இருந்து ரூ.3.15 லட்சம், அனிலிடமிருந்து ரூ.95,000, திரிபாதியிடமிருந்து ரூ.1.95 லட்சம், ஷம்மியிடமிருந்து ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா் விசாரணையில் மேலும் இரண்டு போ்கைது செய்யப்பட்டனா். புகாா்தாரரின் முன்னாள் ஓட்டுநரும், மூளையாகச் செயல்பட்டவருமான ஆதேஷ் குமாா் (38) மற்றும் அமித் குமாா் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா்.
ஆதேஷ் குமாா் வசம் இருந்து ரூ.55,000 ரொக்கமும், மூன்று கைப்பேசிகளும் மீட்கப்பட்டன. கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்ட காரும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அமித் வசம் ரூ.5,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
ஆதேஷ் குமாா் மற்றும் அமித் குமாா் ஆகிய இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனா். மற்ற கூட்டாளிகளைக் கண்டுபிடித்து மீதமுள்ள திருடப்பட்ட பணத்தை மீட்க அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள சந்தேக நபா்களைக் கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் காவல் துறை அதிகாரி.