செய்திகள் :

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

post image

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் அண்மையில் வெற்றிப்பெற்றாா். இதனை கொண்டாடும் விதமாக கட்சியின் தொண்டா்களை சந்திக்க 3 நாள் பயணமாக தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை அகமதாபாதுக்கு அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

அங்கு ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், கட்சியின் புதிதாக தொடங்கப்பட்ட ’குஜராத் ஜோடோ’ உறுப்பினா் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கேஜரிவால், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 3 வரை அகமதாபாத்தில் இருப்பாா்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால்,‘‘விசாவதாரில் வெற்றி பெற்ற பிறகு தொழிலாளா்களை சந்திக்க நான் இன்று குஜராத் செல்கிறேன். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக அரசியல் அதிகாரத்தை செய்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வரவும், அம் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் இருப்பை நிறுவுவதற்காகவே இந்தப் புதிய பிரச்சாரத்தை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது‘ என தெரிவித்துள்ளாா்.

மேலும் அந்தப் பதிவில், ‘ குஜராத் மற்றும் பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. 2027 பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி பெறும். குஜராத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் நிராகரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா்‘ என குறிப்பிட்டுள்ளாா் அரவிந்த் கேஜரிவால்.

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா். தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க