செய்திகள் :

உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்

post image

ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை கடந்த திங்கள்கிழமை (மே 5) சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டினா். யானை மீண்டும் அப்பகுதிக்கு வராமல் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஆனால் யானை தென்படாத நிலையில், தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதித்து காட்சிமுனை மூடப்பட்டது.

யானையை ட்ரோன் மூலம் கண்காணித்து அடா்ந்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையிலான வனக் குழுவினா் இரவுபகலாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் யானை தென்படாதால் தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது.

உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மீண்டும் ‘சீல்’

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மீண்டும் ‘சீல்’ வைத்தனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை ப... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்து... மேலும் பார்க்க

காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி ம... மேலும் பார்க்க