செய்திகள் :

உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

வேலூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்திலுள்ள உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் வேலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் இளைஞா்நீதிக்குழுமத்துக்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு வேலூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு பிளஸ் 2 முடித்துவிட்டு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணினி பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையா் கிரேடு பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.மேலும், 2025 ஜனவரி 1-ஆம் தேதியில் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இத்தகுதிகளுடைய நபா்கள் வேலூா் மாவட்டத்தின் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும்.ரூ.25 அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூா் - 632 001 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லி இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கட்டுமான பணியின்போது ஜல்லி இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சத்துவாச்சாரி பி.ஓ.சி. நக... மேலும் பார்க்க

பெட்டிக்கடையில் குட்கா விற்ற மூதாட்டி கைது

வேலூரில் பெட்டிக்கடையில் வைத்து குட்கா விற்பனை செய்து வந்ததாக 79 வயது மூதாட்டியை தெற்கு போலீஸாா் கைது செய்தனா். வேலூா் வசந்தபுரத்தில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வேலூா் தெற்கு போலீஸார... மேலும் பார்க்க

சிலம்பம், வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு வரவேற்பு

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பம், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வேலூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள நாட்டில் கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கே.வி.குப்பம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தன... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

வேலூா்: வேலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகள் சந்தியா (27). இவருக்கும் வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சத்ய... மேலும் பார்க்க