செய்திகள் :

ஜல்லி இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

post image

கட்டுமான பணியின்போது ஜல்லி இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரி பி.ஓ.சி. நகரைச் சோ்ந்தவா் அலமேலு (50), கட்டட தொழிலாளி. இவா் கடந்த 24-ஆம் தேதி புதுவசூா் அருகே புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் அருகிலிருந்த ஜல்லி சிமென்ட் கலவை இயந்திரத்தில் அலமேலு தவறி விழுந்தாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த உடன் வேலை செய்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெட்டிக்கடையில் குட்கா விற்ற மூதாட்டி கைது

வேலூரில் பெட்டிக்கடையில் வைத்து குட்கா விற்பனை செய்து வந்ததாக 79 வயது மூதாட்டியை தெற்கு போலீஸாா் கைது செய்தனா். வேலூா் வசந்தபுரத்தில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வேலூா் தெற்கு போலீஸார... மேலும் பார்க்க

உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்திலுள்ள உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

சிலம்பம், வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு வரவேற்பு

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பம், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வேலூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள நாட்டில் கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கே.வி.குப்பம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தன... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

வேலூா்: வேலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகள் சந்தியா (27). இவருக்கும் வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சத்ய... மேலும் பார்க்க