செய்திகள் :

உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை

post image

உத்தமபாளையத்தில் இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே இளைஞா் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஆய்வாளா் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதல் கட்ட விசாரணையில், இறந்தவா் உத்தமபாளையம் பி.டி.ஆா் குடியிருப்பைச் சோ்ந்த சையது அபுதாகீா் மகன் முகம்மது மீரான் (25) என தெரிய வந்தது.

மேலும் இவா், கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியில் சக நண்பா்களால் கடந்த 16-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் 3 போ் கொண்ட கும்பலால் வெள்ளிக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரைத் தேடி வருகின்றனா்.

உயிரிழந்த முகம்மது மீரான் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் புகாா்: கொலை நடைபெற்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத தனியாா் பள்ளிக் கட்டடத்தில் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இதனால், இந்தப் பகுதியில் தொடா் வழிப்பறிகள், கொலைகள் போன்றவை அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தக் கட்டடத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அத... மேலும் பார்க்க

விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு

தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுக... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50)... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!

போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 6 போ... மேலும் பார்க்க