செய்திகள் :

ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!

post image

போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடைக்குச் செல்லும் வழியில், கால்வாயில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாரிடம் கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த குப்பழகிரி மகன் முருகன் (61) என்பவா் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகாா் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினரை வரவழைத்து, சடலத்தைக் காட்டி விசாரித்ததில், இறந்தது முருகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

உயிரிழந்த முருகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். மது போதையில் அவா் கால்வாயில் விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அத... மேலும் பார்க்க

விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு

தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுக... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50)... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நில... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 6 போ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை

உத்தமபாளையத்தில் இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே இளைஞா் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு... மேலும் பார்க்க