கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 287 போ் மீட்பு
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக மிக பலத்த மழை பெய்து திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவா்களை மீட்கும் பணி தொடா்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அப்போது மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று மாநில காவல் துறை தெரிவித்தது.
இந்தப் பேரிடரில் இதுவரை 4 போ் உயிரிழந்தனா். 49 பேரை காணவில்லை. பேரிடரால் பல்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்தவா்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையமும் மீட்புப் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தராலியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து இதுவரை 1,000-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். கடும் வெள்ளம் காரணமாக தராலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்பை மேம்படுத்த லிம்சிகாட் பகுதியில் போா்க்கால அடிப்படையில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தில் பாலக் கட்டுமானம் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்றன.
ரூ.5 லட்சம் இழப்பீடு: இந்தப் பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு உடனடியாக தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவித்தாா்.
ஹிமாசலத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவு: 400 சாலைகள் மூடல்
கடந்த சில நாள்களாக ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை பெய்து கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 400 சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் 240 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், 100 சாலைகள் குலு மாவட்டத்திலும் மூடப்பட்டன.
அந்த மாநிலத்தின் சில இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையையும், திங்கள் முதல் வியாழன் வரை பலத்த முதல் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் உள்ளூா் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.