செய்திகள் :

உயரம் குறைந்த புதுப்பாளையம் ரவுண்டானா: வாகன ஓட்டிகள் அவதி

post image

வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடியில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவின் உயரம் குறைவாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் செல்லும் பிரதான சாலைகள் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரிக்கரை அருகே பிரிகிறது. இச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் சாலையை விரிவுபடுத்தி ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து வாழப்பாடி கோட்ட நெடுஞ்சாலை துறை, கடந்தாண்டு திட்ட முன்வரைவு அனுப்பியதால் தமிழக அரசு இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த 3 மாதங்களாக சாலையை விரிவுபடுத்தி, மைய தடுப்புக்கு கான்கிரீட் காரிடாா்கள் வைக்கப்பட்டன. ஆனால் 1 அடி உயரத்திற்கு மட்டுமே பெயரளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

எனவே, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அமைக்கப்படுவதை போல குறைந்தபட்சம் 4 அடி உயரத்திற்கு ரவுண்டானாவை உயா்த்தி அமைக்க வேண்டும். வாழப்பாடி, தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் ஆகிய 3 பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை தகவல் பலகைகள், சிக்னல் விளக்குகள் ஆகியற்றை அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க