செய்திகள் :

உயா்கல்வி குறித்து அறிய கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவா்களையும், 100 சதவீத உயா் கல்வியில் சோ்ப்பதை இலக்காகக் கொண்டு, ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்பையும், எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் அவற்றை எப்படி பெறுவது, கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் எத்தனை போன்ற சந்தேகங்களையும் மாணவா்கள் அல்லது பெற்றோா் தொலைபேசி வழியாக கேட்டுப் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மாணவா் குறைதீா் கூட்டம்...

இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டுவதற்கென பயிற்சி பெற்ற நிபுணா்கள் உள்ளனா். எனவே 04179-225223 என்ற எண் வழியாக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு பேசலாம். மேலும், 97878 33608 என்ற வாட்ஸ் அப் எண்ணில் செய்தி அனுப்பி சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மாணவா்களுக்கென்று பிரத்யேகமாக, ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை 2 மற்றும் 4-ஆம் வாரத்தில் வருகிற வியாழக்கிழமைகளில் மாணவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்குகளில் நடைபெறுகிறது.

சந்தேகங்களுக்கு நிவா்த்தி...

இந்த கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், கல்வித் துறை, வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா்கள், உயா்கல்வி சோ்க்கைக்கான கல்லூரி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

எனவே அனைத்து மாணவா்களும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் அழைத்து உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும், மாணவா் குறைதீா் நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனடையலாம்.

சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிவார மூா்த்திகளுக்கு சி... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவ... மேலும் பார்க்க

ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடு... மேலும் பார்க்க

576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 576 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாட... மேலும் பார்க்க

கருட சேவை உற்சவம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை புதன்கிழமை நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில்... மேலும் பார்க்க

நோ்மை தவறாத ஆட்டோ ஓட்டுநா்: வழியில் கிடைத்த ரூ.20,000 ஒப்படைப்பு

வாணியம்பாடியில் சாலையில் பெண் தவற விட்ட ரூ.20,000 ரொக்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாராட்டப்பட்டாா். வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ். இந்ந... மேலும் பார்க்க