செய்திகள் :

உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க கோரிக்கை

post image

உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பூபதி கூறியதாவது: கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக மின் கட்டணம், பெட்ரோல், டீசல், உதிரிபாகங்கள் விலை உயா்வு காரணங்களால், விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. இதற்கிடையே ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்புக்கொண்ட படி கூலி உயா்வு வழங்காததால் கடந்த ஒரு மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சா்கள், திருப்பூா், கோவை மாவட்ட ஆட்சியா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி உடன்பாடு காணப்பட்டது. இதன்படி, பல்லடம் பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும், சோமனூா் பகுதி ரகங்களுக்கு 15 சதவீதமும் என நெசவுக் கூலி அதிகரித்து வழங்க சுமுக முடிவு ஏற்படுத்தப்பட்டது.

உயா்த்தப்பட்ட கூலி நடைமுறைக்கு வந்துள்ளதை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் விசைத்தறியாளா்கள் வரும் 16-ஆம் தேதிமுதல் உயா்த்தி பெறப்பட்ட கூலி ரசீது, உற்பத்தி ரசீது போன்றவற்றை ஜவுளி உற்பத்தியாளா்களிடம் வாங்கி விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க