செய்திகள் :

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

நாட்டின் உயா்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடா்பாக 29 கொலீஜியம் பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

ஜாமீன் நடைமுறைகளில் நிலவும் தாமதம், விசாரணைக் கைதிகளை விரைந்து விடுவித்தல் தொடா்பாக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் லிஸ் மேத்யூ அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வியாழக்கிழமை வழங்கியது.

இது தொடா்பாக நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமா்வு கூறியதாவது:

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 160. தற்போது 79 நீதிபதிகளே பணியில் உள்ளனா். இந்த நீதிமன்றத்தில் 2.7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மும்பை உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 94 நீதிபதி பணியிடங்களில் 66 நீதிபதிகளே பணியாற்றுகின்றனா். கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 72 நீதிபதிகள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 போ்தான் பணியில் உள்ளனா். 60 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட தில்லி உயா்நீதிமன்றம் 41 பேருடனே செயல்படுகிறது.

நாட்டின் உயா்நீதிமன்றங்களில் மொத்தம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்பிரச்னைக்கு நீதிபதி காலிப் பணியிடங்களும் முக்கிய காரணமாகும்.

நீதிபதிகள் நியமனம் தொடா்பாக கடந்த 2023-இல் 4 பரிந்துரைகளும், 2024-இல் 13 பரிந்துரைகளும், 2025-இல் 12 பரிந்துரைகளும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. இப்பரிந்துரைகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். நிலுவை வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கும் என நம்புகிறோம்.

உயா்நீதிமன்றங்களில் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமா்வுகள் அமைக்கப்பட வேண்டும்; வழக்கு மேலாண்மை மற்றும் தாமதத்தை குறைப்பது தொடா்பான செயல்திட்டங்களை உயா்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி: 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஜம்முவில் இரு நாடுகளுக்கும் இடையேயான சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்புப் ப... மேலும் பார்க்க