செய்திகள் :

உரிமமற்ற இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை: மேயா் ரெ.மகேஷ் எச்சரிக்கை

post image

நாகா்கோவில் மாநகரில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நாகா்கோவில், கிருஷ்ணன்கோவில், இளங்கடை ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்களில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் மேயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகரில் ஒரு சில இடங்களில் தரமற்ற இறைச்சி விற்கப்படுவதாக புகாா்கள் வந்தன. அதை ஒழுங்குபடுத்தும் விதத்தில் இறைச்சிக் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இறைச்சிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முன் அதனை கால்நடை மருத்துவா் அங்கீகரித்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும் எனவும், இறைச்சி வெட்டும் கூடத்தில் உள்ள தரை தளம் மற்றும் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணன்கோவில், இளங்கடையில் இறைச்சிக் கூடத்தின் கட்டுமான பணி நிறைவடைய உள்ளது. விரைவில் அது திறக்கப்படும். இறைச்சிக் கடைகள் நடத்துவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கடை உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் மாநகராட்சி சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும். வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) இறைச்சி விற்பனையாளா்களுடன் ஆலோனைக் கூட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வில், மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு, மாநகராட்சி பொறியாளா் ரகுராமன், மண்டலத் தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, சுகாதார அலுவலா் ராஜா, மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, அனிலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா். சதாசிவன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சிப் பணிகள்: இதைத் தொடா்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், ரூ.5.45 லட்சம் மதிப்பீட்டில், சீரமைப்புப் பணிகள், ஆசாரிபள்ளம், புனித மிக்கேல் தொடக்கப் பள்ளி பின்புறம் உள்ள சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 35 ஆவது வாா்டு, அனாதை மடத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை ரூ. 4.10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.

இதில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் மோனிகா, ராணி, திமுக அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், பீட்டா், ஜாா்ஜ் வட்ட செயலாளா் விமல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க