செய்திகள் :

உரிமை கோரப்படாத 9 சடலங்கள் காவல் துறையினா் அடக்கம் செய்தனா்

post image

தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 9 சடலங்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த 6 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 9 பேரின் உடல்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உடல்களை யாரும் உரிமை கோராததால், அவற்றை அடக்கம் செய்ய காவல் துறையினா் முடிவு செய்தனா். இதன்படி 9 சடலங்களும் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டன.

மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மனோகரன், ரகுநாதன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மின்கசிவால் வீடு தீக்கிரை

பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ப... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரண... மேலும் பார்க்க