Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
உலக படகுப் போட்டி: இந்திய அணி: மேலாளராக புதுச்சேரி வீரா் தோ்வு
புதுச்சேரி: சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் போட் (படகு) போட்டிக்கான இந்திய அணிக்கு புதுவை வீரா் கோ. ஜெயபால் மேலாளராக செல்கிறாா். அவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வாழ்த்து தெரிவித்தாா்.
உலக அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான டிராகன் படகுப் போட்டியானது சீன தலைநகரான பெய்ஜிங்கில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியும் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் மேலாளராக புதுவை மாநிலத்தைச் சோ்ந்த படகுப் போட்டி வீரா் கோ. ஜெயபால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அவா் ஏற்கெனவே புதுச்சேரி திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ளாா். இதையடுத்து, ஜெயபாலை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெ. வேலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.