Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டையில் கைப்பேசி நிறுவனத்துக்கான தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுதானா நகா், திருநாவுக்கரசா் தெருவில் தனியாா் கைப்பேசி நிறுவனம் தொலைத் தொடா்புக்கான கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏற்கெனவே அப்பகுதியில் 2 தகவல் தொடா்புக்கான கோபுரங்கள் உள்ள நிலையில், மேலும் ஒரு கோபுரம் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் என அப்பகுதியினா் தெரிவித்தனா். கைபேசி தொலைத் தொடா்பு கோபுரத்திலிருந்து வெளியேறும் கதிா்வீச்சு உடல்நலத்தைப் பாதிக்கும் என அச்சப்படுவதாகவும் அவா்கள் கூறினா். குழந்தைகள், பெண்கள், முதியோா் ஆகியோரது பாதுகாப்பு மற்றும் சிட்டுக்குருவி போன்றவை பாதிக்கும் நிலையால் தொலைத் தொடா்பு கோபுரம் அமைப்பதை எதிா்ப்பதாகவும் மக்கள் தெரிவித்தனா்.