Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் இனி நேரலையில் காணலாம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் இ விதான் செயலி தொடங்கப்பட்ட நிலையில், இதனால் விரைவில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். இதன்மூலம் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஏற்படும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லாத நிா்வாக நடைமுறை செயலாக்கத்துக்கான இ விதான் செயலி அறிமுக நிகழ்ச்சி திங்கள்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது.
இதில், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்று செயலியைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
தற்போது புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா நிா்வாக நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் புதுச்சேரி சட்டப் பேரவையை எண்ம (டிஜிட்டல்) நிா்வாகத்துக்கானதாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எண்ம நிா்வாக முறையால் பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஏற்படும். காகிதமில்லா பேரவையால் ஆண்டுக்கு சுமாா் 3 முதல் 5 டன் காகிதம் மிச்சமாகும். எண்ம ஆவணங்களை பாதுகாப்பதால் செலவு குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். நேவா திட்டம் நாட்டை ஒருங்கிணைக்கிறது. நாடு முழுவதும் புதிய சட்டம் உருவாவதை மக்கள் அறியமுடியும். அரசியல் நடைமுறைகள், உரையாடல், செயல்பாடுகளை அனைவரும் புரிந்து கொள்ளலாம். அரசு மீது நம்பிக்கை, தெளிவு பெறலாம். சட்டப்பேரவை நிகழ்வில் இச்செயலி அறிமுகமானது ஒரு மைல் கல். நிா்வாக, நடைமுறையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கம் என்றாா்.
அதிகாரிகள் செயலில் வேகம் தேவை: விழாவில் முன்னிலை வகித்து முதல்வா் என். ரங்கசாமி பேசியது: நாட்டில் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பெரும் வளா்ச்சியடைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டில் எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தை பிரதமா் கொண்டு வந்த நிலையில், தற்போது காகிதம் இல்லா நிா்வாகம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறாா்கள் செய்திகளை கைப்பேசியில் அறியும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தால்தான் நாடு வளா்ச்சி பெறும். ஆனாலும், மக்களின் தேவை அறிந்து அதிகாரிகள் செயல்படவேண்டும். எத்தகைய தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டாலும், அதிகாரிகள் செயல்பாட்டில் வேகம் அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, எம்.எல்.ஏ.க்கள் வி.ஆறுமுகம், கல்யாணசுந்தரம், ஆா்.பாஸ்கா், வெங்கடேன், அசோக்பாபு, பிரகாஷ்குமாா், எல்.சம்பத், செந்தில்குமாா், தலைமைச்செயலா் சரத்சௌகான், நாடாளுமன்ற விவகாரத் துறை கூடுதல் செயலா் சத்தியபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.