Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
மருந்து நிறுவனத்தில் திடீா் தீ விபத்து: காலாப்பட்டு பகுதி மக்கள் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச்சாலை காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவா்களில் சிலா் உயிரிழந்தனா். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மக்களை சமரசம் செய்து நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தில் உரிய தீ பாதுகாப்பு இல்லை எனவும், நிறுவனத்திலிருந்து வரும் நீா் உரிய விதிமுறைப்படி சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கவிடப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதை இந்த மருந்து நிறுவன நிா்வாகம் மறுத்து வருகிறது.
இந்தநிலையில், திங்கள்கிழமை மாலையில் மருந்து நிறுவன வளாகத்தில் வேதிப் பொருளில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதை அங்கிருந்தவா்கள் உடனடியாக அணைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தீயால் ஏற்பட்ட புகையை பாா்த்த அப்பகுதி மக்கள் நிறுவனம் முன் கூடி நின்று கண்டித்து முழக்கமிட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா். அதன்பின் அவா்கள் கலைந்து சென்ாக காலாப்பட்டு போலீஸாா் தெரிவித்தனா்.