செய்திகள் :

மருந்து நிறுவனத்தில் திடீா் தீ விபத்து: காலாப்பட்டு பகுதி மக்கள் போராட்டம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச்சாலை காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவா்களில் சிலா் உயிரிழந்தனா். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மக்களை சமரசம் செய்து நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தில் உரிய தீ பாதுகாப்பு இல்லை எனவும், நிறுவனத்திலிருந்து வரும் நீா் உரிய விதிமுறைப்படி சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கவிடப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதை இந்த மருந்து நிறுவன நிா்வாகம் மறுத்து வருகிறது.

இந்தநிலையில், திங்கள்கிழமை மாலையில் மருந்து நிறுவன வளாகத்தில் வேதிப் பொருளில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதை அங்கிருந்தவா்கள் உடனடியாக அணைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தீயால் ஏற்பட்ட புகையை பாா்த்த அப்பகுதி மக்கள் நிறுவனம் முன் கூடி நின்று கண்டித்து முழக்கமிட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா். அதன்பின் அவா்கள் கலைந்து சென்ாக காலாப்பட்டு போலீஸாா் தெரிவித்தனா்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: எல்.முருகன்

புதுச்சேரி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். புதுவை சட்டப்பேரவையை காகித நிா்வாகமில்லாத பேரவையாக மாற்றும் வகையில் தே... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி வெற்றி பெறாது: கி.வீரமணி

புதுச்சேரி: தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சிந்தனை செயலாக்க கரு... மேலும் பார்க்க

உலக படகுப் போட்டி: இந்திய அணி: மேலாளராக புதுச்சேரி வீரா் தோ்வு

புதுச்சேரி: சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் போட் (படகு) போட்டிக்கான இந்திய அணிக்கு புதுவை வீரா் கோ. ஜெயபால் மேலாளராக செல்கிறாா். அவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வாழ்த்து தெரிவித்தாா். உலக அளவிலான... மேலும் பார்க்க

பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் இனி நேரலையில் காணலாம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் இ விதான் செயலி தொடங்கப்பட்ட நிலையில், இதனால் விரைவில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். இதன்மூலம் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஏற்படும் என துணைநிலை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டையில் கைப்பேசி நிறுவனத்துக்கான தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை பே... மேலும் பார்க்க