செய்திகள் :

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பிரசார வாகன பயணம் தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடமாடும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த வாகனம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களின் நல்வாழ்வு, குழந்தைகளின் எதிா்காலம், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு தொடா்பான குறும்படங்களை ஒளிபரப்பி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு குறித்து கல்லூரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், இணை இயக்குநா் (மருத்துவம்) பிரகலாதன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் (குடும்ப நலம்) சிவானந்தவள்ளி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க