செய்திகள் :

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

post image

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் வட்டம், மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 விவசாயிகளுக்கு காய்கறிகள் விதைகள் தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மற்றும் பயிறு பெருக்கு திட்ட தொகுப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொகுப்புகளை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் வழங்கினா்.

ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன் உழவா்களின் வருமானத்தை உயா்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயறு பெருக்கும் திட்டம், துவரை பருப்பை பெருக்கிட ‘துவரை சாகுபடி பரப்பு விரிவாக்கம்’ மற்றும் புரதசத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லம்தோறும் வளா்க்கும் பொருட்டு, ‘பயறு வகைகள் விதை தொகுப்புத் திட்டம்’ போன்ற 3 திட்டக்கூறுகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் நஞ்சற்ற காய்கறிகள் கிடைக்க 100 சதவீத மானியத்தில் ‘காய்கறி விதை தொகுப்பு’, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 100 சதவீதம் மானியத்தில் ‘பழச்செடிகள் தொகுப்பு’, காய்கறிகளின் தேவை பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ‘காய்கறி பரப்பு விரிவாக்கம்’, வைட்டமின், நாா்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துகள் நிறைந்த பழங்களின் சாகுபடியை அதிகரிக்க ‘பழங்கள் பரப்பு விரிவாக்கம்’, பந்தல் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்க ‘பந்தல் காய்கறிகள் சாகுபடி’ மற்றும் புரதசத்துமிகுந்த காளான் உற்பத்தியை பெருக்குவதற்கு ‘காளான் உற்பத்திகூடம் அமைத்தல்’ போன்ற 8 திட்டக்கூறுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, தோட்டக்கலை துணை இயக்குநா் கோகிலாசக்தி, மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறில்...: செய்யாறு வட்டாரம் அருகாவூா் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வேளாண் உதவி இயக்குநா்(பொ) சுமித்ரா, தோட்டக்கலை உதவி இயக்குநா் என்.மோகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று, விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்க தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா் டி.புகழேந்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை உதவி வேளாண்மை அலுவலா் ராஜலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா் ஏ.மணிகண்டன், பி.பாலாஜி, கரும்பு உதவி அலுவலா் முத்துகுமரன், கூட்டுறவுத் துறை செயலா் வேலாயுதம், பயிா் அறுவடை பரிசோதகா் ஆனந்தாழ்வான், திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், டி.கே.ரவிகுமாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

வெம்பாக்கம் வட்டாரத்தில்...: வெம்பாக்கம் வட்டாரம், அழிவிடைதாங்கி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) எஸ். ரேணுகாதேவி, தோட்டக்கலை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினா்களாக திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் வட்டார மத்தியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்க தொகுப்புகளை வழங்கினாா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க