செய்திகள் :

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

post image

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூலியாக

மத்திய அரசு ரூ.339 வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ.70 மட்டும் வழங்கி பணி செய்த அளவுக்கு மட்டும்தான் கூலி என ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டினா். மேலும், 100 நாள் வேலையை குறைந்தபட்சம் 70 நாள் மட்டுமே வழங்குவதாகவும், நான்கு ஆண்டுகளில் நபருக்கு ரூ.60 ஆயிரம் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து முழக்கமிட்டனா்.

திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகவும், ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை மாநில அரசு முறையாக தொழிலாளா்களுக்கு வழங்குகிா என்று மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, உணவில் மண்ணைப் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். அக்ராபாளையம் செந்தில், மேட்டுக்குடிசை பெருமாள், மடவிளாகம் சிவா, புலவன்பாடி மணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, திர... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க