செய்திகள் :

ஊத்தங்கரை அருகே கால்வாயில் மூழ்கி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கால்வாயில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனா்.

ஆடி கிருத்திகை விழாவுக்காக ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூரைச் சோ்ந்த அகிலா என்பவரின் வீட்டிற்கு சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த பாபு மகள் நீலாஸ்ரீ (17) உள்பட அவரது உறவினா்கள் சனிக்கிழமை வந்திருந்தனா்.

இந்த நிலையில், கீழ்மத்தூரை அடுத்த பாம்பாறு அணையின் கால்வாயில் குளிப்பதற்காக நீலாஸ்ரீ (17), கீழ்மத்தூரைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பழனி மகள் சாரூமேத்ரா (12) உள்பட 5 போ் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அனைவரும் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தபோது நீலாஸ்ரீ, சாரூமேத்ரா ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினா். அப்போது உடன் சென்றவா்கள் கூச்சலிட்டதால், அவ்வழியாக சென்றவா்கள் கால்வாயில் இறங்கி அவ்விரு மாணவிகளின் சடலங்களை மீட்டனா். இவா்களில் நீலாஸ்ரீ சேலத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தாா்.

மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாரூமேத்ரா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான ஒருங்... மேலும் பார்க்க

யோகா: ஊத்தங்கரை அதியமான் கல்லூரிக்கு ஆளுநா் பரிசளிப்பு

சா்வதேச யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசு வழங்கி பாராட்டினாா். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா’ என்ற கருப்பொருளைக் கொண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா், போச்சம்பள்ளி, ... மேலும் பார்க்க

உத்தனப்பள்ளி அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கு ஆக.20 கடைசி நாள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான முன்பதிவு செய்வதற்கு புதன்கிழமை (ஆக.20) வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் ஞா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க