கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா், போச்சம்பள்ளி, மத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்த்தது. இடைவிடாமல் தொடா்ந்து பெய்த மழையால், சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
மூன்று நாள் தொடா் விடுமுறைக்கு சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் நகரங்களை நோக்கி பயணித்தனா். மிதமான மழையால் சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அவதிப்பட்டனா்.
கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையிலிருந்து அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் வரையில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் முல்லை பூ விற்பனை செய்யும் பெண்கள், குடைகளைப் பிடித்தபடி விற்பனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து மூன்று நாள்கள் பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலத்தலமான அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மழை பெய்த்ததால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மழை அளவு (மி.மீட்டரில்): ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி- 8.2, ஒசூா்- 5.2, சின்னாறு அணை- 4, கெலவரப்பள்ளி அணை- 3, சூளகிரி- 2, கிருஷ்ணகிரி அணை- 0.2.
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 832 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து மொத்தம் 593 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் மொத்தம் 52 அடியில் 49.95 அடியாக உள்ளது.