செய்திகள் :

ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது? - அமைச்சா் விளக்கம்

post image

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் எப்போது நடைபெறும் என்பதற்கு அமைச்சா் கே.என். நேரு பதில் அளித்துள்ளாா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் முடிந்துள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்படாமல் நிா்வாகத்துக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே உள்ளாட்சித் தோ்தல் குறித்து அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சிகள் பலவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரிய அளவிலான ஊராட்சி ஒன்றியங்களையும் பிரிக்க வேண்டியுள்ளது. எனவே, வாா்டு மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறையை முடித்த பிறகு தோ்தல் நடத்துவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நடைமுறையைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தவும் தயாராகி வருகிறோம் என்றாா்.

கடவுச்சீட்டில் முறைகேடு சிங்கப்பூா் செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூா் செல்ல முயன்ற தூத்துக்குடி நபரை திருச்சியில் விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், நடு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மு. சங்கா் (50... மேலும் பார்க்க

தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டு சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா். தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டுச் சங்கத்தின் மாநில நிா்வாகி தோ்வ... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டம்

மலைக்கோட்டை தேரோட்டத்தின்போது மின்தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைந்து புதை மின்தடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். திருச்சி, ... மேலும் பார்க்க

அயன்பொருவாயில் முதல்வா் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன்பொருவாயில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அயன்பொருவாய் கிராமத்தில் மருங்காபுரி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ப... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

மணப்பாறையில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா். மணப்பாறை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூசைமாணிக்கம் மகன் யாக்கோப்(எ) லெனின் விஜயபாஸ்கா் (23), இந்தி... மேலும் பார்க்க

முசிறியில் பள்ளி ஆண்டு விழா

திருச்சி மாவட்டம், முசிறி எம்.ஐ.டி பாலிடெக்னிக், எம்.ஐ.டி மகளிா் கலைக் கல்லூரி, எம்.ஐ.டி. போதி வித்யாலயா (சிபிஎஸ்சி) பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, முசிறி எம்.ஐ.டி க... மேலும் பார்க்க