கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் மனு
தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஏ.ஜெட்டி அள்ளி கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரியை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி, ஏர்ரப்பட்டி, தகடூா், ஒட்டப்பட்டி, கோடியூா், செட்டியூா், செட்டியூா் காலனி, தேங்கமரத்துப்பட்டி ஆகிய கிராமங்கள் தருமபுரி நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த நான்கு மாதங்களாக ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
எனவே, எங்களது கிராம மக்களின் நலன்கருதி எங்களுக்கு மீண்டும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.