செய்திகள் :

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் மனு

post image

தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஏ.ஜெட்டி அள்ளி கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரியை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி, ஏர்ரப்பட்டி, தகடூா், ஒட்டப்பட்டி, கோடியூா், செட்டியூா், செட்டியூா் காலனி, தேங்கமரத்துப்பட்டி ஆகிய கிராமங்கள் தருமபுரி நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த நான்கு மாதங்களாக ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.

எனவே, எங்களது கிராம மக்களின் நலன்கருதி எங்களுக்கு மீண்டும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் மீட்பு

தருமபுரியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி-சேலம் சாலையில் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அவ்வை வழி அருகே தமிழ்நாடு வீட்டுவச... மேலும் பார்க்க

உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: 10 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், வட்டா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அ... மேலும் பார்க்க

5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். தருமபுரி ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

சாலை விபத்துகளைத் தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த துறை அலுவலா்களுடனான ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் சினி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தவறவிடும் நகைகளை தேடி எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒகேனக்கல் சினி அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நகைகள் சில நேரங்களில் நீரின் விசை காரணமாக அறுந்து விழுந்துவிடுகின்றன. இந்த நகைகளை இரவு நேரங்களில் தடையைமீறி நீரில் மூழ்கி தேட... மேலும் பார்க்க