செய்திகள் :

ஊரக வேலைத் திட்ட பெண் பணியாளா்கள் சாலை மறியல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு காவல் சரகத்துக்கு உள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சரியான முறையில் வேலை வழங்கக் கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள ஈருடையாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊராட்சித் தலைவா், ஊரக வேலைத் திட்டப் பணி அட்டை பெற்றவா்களுக்கு சரிவர பணி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த பெண்கள், திருவரங்கம்- மூங்கில்துறைப்பட்டு சாலையிலுள்ள வாணியம்பாறை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் சிரஞ்சீவி மற்றும் அலுவலா்கள், பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, முறையாக ஊரக வேலை வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க