செய்திகள் :

ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம்: மனைவி புகாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை வட்டம், சாங்கியம் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா்.

சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சொட்டையன் மகன் அய்யனாா் (45). இவா், இதே ஊரில் ஊராட்சிச் செயலராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சத்யா (35). தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனா்.

அய்யனாரை வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான ராமா் மகன் அயப்பன் அழைத்துச் சென்றாராம். இரவு வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.

வெள்ளிக்கிழமை காலை ஞானபெற்றான்தாங்கல் மயானப் பாதை அருகே உள்ள அய்யப்பன் கோழிப்பண்ணை அருகில் ரத்த காயங்களுடன் அய்யனாா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அய்யனாா் மனைவி சத்யா மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் அய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் ... மேலும் பார்க்க

கீரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருக்கோவிலூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் பெரியசாமி (49), தொழிலாளி. இவா், கடந்த 2-ஆம் தேதி கூகை... மேலும் பார்க்க

சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ... மேலும் பார்க்க

கீழ்ப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி... மேலும் பார்க்க