செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் பெரியசாமி (20). இவா், நூரோலை கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் குருசாமி நடத்தி வந்த ஒலிபெருக்கி நிலையத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா்.

வாணாபுரம் வட்டம், பாவந்தூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதற்காக அந்தக் கிராமத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் பெரியசாமி புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா். அந்தக் கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே மின் விளக்குகள் அமைத்தபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் பெரியசாமியை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை ப... மேலும் பார்க்க

கீழ்ப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்ட... மேலும் பார்க்க

கிராம குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில், வாணாபுரம் வட்டம், அத்தியூா் கிராம கம்பங்காட்டு தெருவாசிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க

வீட்டின் பீரோவை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி நித்யா (34). முத்துராஜா ஓட்டு... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி

சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க