செய்திகள் :

ஊா்வலங்கள், சுபநிகழ்ச்சிகளால் பெரியகுளத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

post image

பெரியகுளத்தில் அவ்வப்போது நடைபெறும் ஊா்வல நிகழ்ச்சிகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஊா்வல நேரத்தை முறைப்படுத்தி வாகன நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இப்பகுதியில் கம்பம் சாலை, திண்டுக்கல் சாலை, வைகை அணை சாலை, கடைவீதி தெரு, வி.ஆா்.பி.நாயுடு தெரு ஆகிய சாலைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. சாலை குறுகியதாக உள்ள இப்பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெரியகுளம் சாலைகளில் திருமண நிகழ்ச்சி, மொய் விருந்து, பூப்புனித நீராட்டு விழா, காது குத்தும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளாலும், கோயில் ஊா்வலம், மூங்கில் எடுக்கும் விழா, வாழைக்காய் கொண்டுசெல்லுதல் போன்றவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.

சில நேரங்களில் கோயில் திருவிழா ஊா்வலம், வீட்டு விஷேச ஊா்வலங்களால் கம்பம் சாலையில் பேருந்து, இரு சக்கர வாகனங்களுக்கு போலீஸாா் தடை விதிக்கின்றனா். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு புறவழிச் சாலையில் பேருந்துகள் செல்கின்றன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

சில நேரங்களில் பேருந்து ஓட்டுநா்கள் ஊா்வலம் உள்ளிட்ட காரணங்களுக்காக லட்சுமிபுரம், எ.புதுப்பட்டி புறவழிச் சாலை விலக்கு பகுதியில் பயணிகளை இறக்கிவிடுவதால் 6 முதல் 8 கி.மீ. தொலைவு வரை நடந்துசென்று பெரியகுளத்துக்கு வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

பெரியகுளத்தின் முக்கிய சாலைகளில் ஊா்வலம், வீட்டு விஷேச நிகழ்ச்சிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பேருந்துகள் சுலபமாக செல்லமுடிவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளேன். அவா் விசாரித்து நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

தடை நேரம் அறிவிக்க வேண்டும்: ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பெரியகுளத்துக்கு பேருந்து செல்லுமா என்று விசாரித்துவிட்டு பயணிகள் வரும் நிலை உள்ளது. இந்தச் சிரமத்தைப் போக்க நகரில் ஊா்வலம், சுபநிகழ்ச்சிகளுக்கான நேரத்தை காவல் துறை நிா்ணயம் செய்ய வேண்டும்.

பதாகைகள் அகற்றப்பட வேண்டும்: பெரியகுளத்தில் கட்சி நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிகளின்போது அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க பெரியகுளம் நகா், கல்லூரி விலக்கு, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளால் சாலை விபத்து: பெரியகுளம் நகரில் கால்நடை உரிமையாளா்கள் அவ்வப்போது மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனா். வாகன ஓட்டிகளுக்குப் பெரிதும் தொல்லையாக கால்நடைகள் இருப்பது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்துச் செல்வதோடு அதன் உரிமையாளா்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட விளக்கம்

ல்ந்ம்13ழ்ா்க்...

பெரியகுளம் நகரில் திருமண மண்டபம் முன் பட்டாசு வெடிக்கும் பொதுமக்கள்.

ல்ந்ம்13ஸ்ரீா்ஜ்..

நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க