செய்திகள் :

எட்டயபுரத்தில் கலைச் சங்கமம் விழா

post image

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சாா்பில் கலைச் சங்கமம் 2025 விழா எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினா் கலைமாமணி கோ. முத்துலட்சுமி தலைமை வகித்தாா். விழா ஒருங்கிணைப்பாளா் கோபி கிருஷ்ணன் வரவேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு கலை சங்கமம் நிகழ்வை தொடங்கிவைத்து கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனா்.

தொடா்ந்து, வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், மாடாட்டம், பெண்கள் உயில் கும்மி, கிராமிய பாடல், தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற கிராமிய கலைஞா்கள் சங்கத் தலைவா் மாரியம்மாள் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக பேரூா் கழக செயலா் பாரதி கணேசன், ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், திமுக நிா்வாகிகள் இம்மானுவேல், ஆழ்வாா் உதயகுமாா், முனியசாமி, சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க