செய்திகள் :

எண்ணேக்கொள் கால்வாய் திட்டத்தை தொடங்காவிட்டால் சாலை மறியல்: அன்புமணி ராமதாஸ்

post image

கிருஷ்ணகிரி: எண்ணேக்கொள் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிருஷ்ணகிரியில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

பாமக சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தில் அக்கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றாா். முன்னதாக அவா், எண்ணேக்கொள் கால்வாய் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:

தருமபுரி மக்களவை உறுப்பினராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, எண்ணேக்கொள்புதுாா் தடுப்பணையிலிருந்து வலதுபக்கம் புதிய கால்வாய் அமைத்து, தருமபுரி மாவட்டம், தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறேன்.

அதேபோல, இடதுபுறக் கால்வாய் மூலம், கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு (படேதலாவ்) தண்ணீா் கொண்டுவரவும் கூறினேன். பாமகவின் தொடா் அழுத்தம் காரணமாக, கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் இந்தத் திட்டத்துக்கு ரூ. 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு வழங்குவதற்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பின்னா், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, நான்கரை ஆண்டுகள் கடந்தும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனா். எனவே, இந்த திட்டப் பணிகளை விரைந்து தொடங்காவிட்டால், தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள், பாமகவைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் 10 நாள்களில் சாலை மறியல் செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், கட்சியினா் எண்ணேக்கொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, அன்புமணி ராமதாஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

நடைப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டத்தில் பேசினாா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க