செய்திகள் :

எலான் மஸ்க் பெயரில் போலி இணையதள பக்கங்கள்: காவல் துறை எச்சரிக்கை

post image

டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக ‘சைபா் கிரைம்’ காவல்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

டெஸ்லா உரிமையாளரும், உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பது போன்ற போலியான விளம்பர காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எலான் மஸ்க், அவரது தந்தை எரோல் மஸ்க் ஆகியோரின் பேட்டிகளை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் பிற தொழில்நுட்பங்கங்கள் மூலம் தவறாக சித்தரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 26 போலி ‘இன்ஸ்டாகிராம்’ கணக்குகளும், 14 போலி இணையதள பக்கங்களும் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எலான் மஸ்க் எந்தவொரு ‘கிரிப்டோ கரன்சி’ செயலி அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, போலி இணையதள தகவலை நம்பி, செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க