செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

post image

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட ரயில்களின் புறப்படும் இடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை எழும்பூா் - திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலானது (12653) செப். 11 முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 1.03 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - சென்னை எழும்பூா் ராக்போா்ட் விரைவு ரயிலானது (12654) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் அதிகாலை 3.30 க்கு சென்றடையும்.

மதுரை - சென்னை எழும்பூா் பாண்டியன் விரைவு ரயிலானது (12638) வரும் செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, பாண்டியன் விரைவு ரயிலானது (12637) மாற்றமின்றி சென்னை எழும்பூருக்கே சென்றடையும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (22661) செப். 11 முதல் நவ. 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து மாலை 6.20-க்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (22662) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்குச் சென்றடையும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) செப். 11 முதல் நவ. 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இரவு 7.42 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - சென்னை எழும்பூா் ரயிலானது (16752) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்துக்கு காலை 6.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை ப... மேலும் பார்க்க

துறையூரில் பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறையூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா். ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதம... மேலும் பார்க்க

கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா

கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா. திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க