செய்திகள் :

எஸ்.ஜெய்சங்கருடன் ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ் பேச்சு: பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

post image

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசிய ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சா் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசிய குட்டெரெஸ், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களை சட்டபூா்வமாக அதற்குப் பொறுப்பேற்க வைப்பது, பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து குட்டெரெஸ் மிகுந்த கவலை தெரிவித்தாா். மோசமான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என்று அவா் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினாா். இதேபோல பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபிடமும் குட்டெரெஸ் தொலைபேசியில் பேசினாா் என்று தெரிவித்தாா்.

இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை தெற்காசிய பிராந்தியமும் உலகமும் தாங்காது என்றும், அந்த மோதல் இந்தியா-பாகிஸ்தான் மட்டுமின்றி உலகுக்கே பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஸ்டீஃபேன் டுஜாரிக் தெரிவித்தாா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க