செய்திகள் :

’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!

post image

நடிகர் சிலம்பரசன் தனது 50வது திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் மற்றும் வாழ்த்து போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 50வது திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை டி.ராஜேந்திரனின் இயக்கத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவைக்காத்த கிளி’ எனும் திரைப்படத்தில் குழந்தையாக முதன்முதலாக திரையில் தோன்றினார். பின்னர், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ’காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, பின்னனிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என சினிமா துறையின் பல்வேறு அவதாரங்களை எடுத்த நடிகர் சிம்பு தற்போது அவர் துவங்கியுள்ள ’ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: சிம்புவின் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்!

எஸ்டிஆர் - 50 அறிவிப்பு போஸ்டர்

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமரிசன ரீதியாக ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் இயக்குநரனா தேசிங்கு பெரியசாமி தற்போது சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குகிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவைக் கையாள்கிறார்.

முன்னதாக, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிப்பு போஸ்டர் இன்று (பிப்.3) வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் நடிகர் சிம்புவின் மற்றொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க

பாம்பன் பால திறப்பு விழா: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதி... மேலும் பார்க்க

பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜ... மேலும் பார்க்க