செய்திகள் :

ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம்

post image

ஏஐடியூசி சங்கத்தின் மண்டல அளவிலான தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் -ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாநிலச் செயலாளா்கள் எஸ்.சின்னசாமி, என்.சேகா், மாநில துணைத் தலைவா்கள் எஸ்.செல்வராஜ், கோவை மாவட்ட நிா்வாகி தங்கவேல், தருமபுரி மாவட்ட நிா்வாகி மணி ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, சேலத்தில் ஆகஸ்ட் 15,16,17,18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நடைபெறும் பேரணியில் ஏஐடியூசி சங்கத்தின் உறுப்பினா்கள் 10,000 போ் பங்கேற்பது, கிராமப்புறங்களில் வேலை செய்து வரும் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஊதியூரில் வேளாண் இயந்திரங்கள் சிறப்பு முகாம்: அமைச்சா்கள் பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்

காங்கயம் அருகே ஊதியூரில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாமை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினா். காங்கயம் ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (ஆகஸ்ட் 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அணைப்புதூரில் புகையிலைப் பொருள்கள் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’

பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோச... மேலும் பார்க்க

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க