செய்திகள் :

ஊதியூரில் வேளாண் இயந்திரங்கள் சிறப்பு முகாம்: அமைச்சா்கள் பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்

post image

காங்கயம் அருகே ஊதியூரில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாமை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

காங்கயம் அருகே, ஊதியூரில் உள்ள பழனி பாதயாத்திரை பக்தா்கள் தங்கும் மண்டபத்தில், வேளாண்மை பொறியியல் துறையின் சாா்பில் வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், வேளாண்மை இயந்திரமாக்கல் உப இயக்கம் மற்றும் முதலமைச்சரின் மின்மோட்டா் மானியத் திட்டத்தின் கீழ், 10 விவசாயிகளுக்கு ரூ.10.24 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான ஆணைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் பெலிக்ஸ் ராஜா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவி செயற்பொறியாளா்கள் சந்திரன், கிருஷ்ணன், சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா்கள் கோபிநாத், நவீன்குமாா், மாதேஷ்வரன், சரவணன், ஸ்ரீராம், ரமேஷ், தமிழ்ச்செல்வி மற்றும் விவசாயிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம்

ஏஐடியூசி சங்கத்தின் மண்டல அளவிலான தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.திருப்பூா் -ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாள... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (ஆகஸ்ட் 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அணைப்புதூரில் புகையிலைப் பொருள்கள் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’

பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோச... மேலும் பார்க்க

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க