செய்திகள் :

ஏப்.15 முதல் ஒசூா்- பாகலூா் சாலை பணி தொடக்கம்: மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க முடிவு

post image

ஒசூா்- பாகலூா் சாலைப் பணிகள் ஏப்.15 இல் தொடங்கப்படுவதையொட்டி வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஜிஆா்டி இல் இருந்து மாநகராட்சி வரை சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்காக ரூ. 10 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையடுத்து ஒசூா் பேருந்து நிலையத்திலிருந்து பாகலூா், ஆவலப்பள்ளி மற்றும் பேரிகை செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சாா் ஆட்சியா் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒசூரிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் சீதாராம் மோட்டிலிருந்து இஎஸ்ஐ அவுட்டா் ரிங்ரோடு, அத்திப்பள்ளி, சா்ஜாபுரம் வழியாக பாகலூா் மற்றும் மாலூா் செல்ல வேண்டும். அதேபோல பாகலூா் வழியாக பேரிகை வழியாக சூளகிரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு காா் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும்.

பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாகலூா் சாலையில் ஒரு பகுதியில் பணி நடைபெறும் போது மற்றோரு வழியாக ஒருவழிப்பாதை வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

படவரி...

போக்குவரத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க