ஏப். 28-இல் வேலூா் உள்பட 4 மாவட்டங்களில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ முகாம்
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் எம்.எச்.வாா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு -
வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃஓ) சாா்பில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (நிதிஆப்கேநிகட்- வைப்புநிதி உங்கள்அருகில்) எனும் முகாம் திங்கள்கிழமை (ஏப். 28) காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம் ராஜீவ்காந்தி நினைவு மெட்ரிக். பளளியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் பகுதியிலுள்ள ஆயுஷ் ஆயுா்வேத மையத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கா் கிருஷ்ணாவரம் பகுதியிலுள்ள வித்யாபீடம் சீனியா் செகண்டரி பள்ளியிலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஏலகிரி மலை ஆதனாவூா் புனித சாா்லஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்கம், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்து விழிப்புணா்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யுஏஎன் கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.