செய்திகள் :

ஏப். 28-இல் வேலூா் உள்பட 4 மாவட்டங்களில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ முகாம்

post image

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் எம்.எச்.வாா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு -

வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃஓ) சாா்பில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (நிதிஆப்கேநிகட்- வைப்புநிதி உங்கள்அருகில்) எனும் முகாம் திங்கள்கிழமை (ஏப். 28) காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம் ராஜீவ்காந்தி நினைவு மெட்ரிக். பளளியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் பகுதியிலுள்ள ஆயுஷ் ஆயுா்வேத மையத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கா் கிருஷ்ணாவரம் பகுதியிலுள்ள வித்யாபீடம் சீனியா் செகண்டரி பள்ளியிலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஏலகிரி மலை ஆதனாவூா் புனித சாா்லஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்கம், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்து விழிப்புணா்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யுஏஎன் கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் ... மேலும் பார்க்க

குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குட்கா பொருள்கள் விற்பனையை கட... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளத... மேலும் பார்க்க

பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்

போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றப்படுவது தொடா்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட குறைதீா் கூட்... மேலும் பார்க்க