செய்திகள் :

மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்

post image

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பராமரிக்கப்படும் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீா் ஆதாரமாகக் கொண்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், வேலூா் மாநகராட்சி முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து ஜாப்ரதோப்பு, த.ச.பாளையம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, அருகதம்பூண்டி, பில்டா் பேட், புண்ணியகோடி நகா், சங்கரன்பாளையம், வசந்தபுரம், பாரதிநகா், விநாயகபுரம், டான்சி, கன்னிக்கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முதன்மை குடிநீா் குழாயில் வேலூா் மீன் மாா்க்கெட் அருகில் நீா் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் இப்பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) முதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) வரை மூன்று நாள்கள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் உள்ளூா் குடிநீா் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குட்கா பொருள்கள் விற்பனையை கட... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளத... மேலும் பார்க்க

பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்

போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றப்படுவது தொடா்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட குறைதீா் கூட்... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் காட்பாடியில் இருவரிடம் ரூ. 31.59 லட்சம் மோசடி

இணையவழியில் காட்பாடியைச் சோ்ந்த இருவரிடம் மொத்தம் ரூ. 31.59 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க