பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ஏரி மண் கடத்தல்: பொக்லைன் இயந்திரம், டிராக்டா் பறிமுதல்
வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளி கடத்த முயன்ாக பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் ஏரியில் சிலா் அனுமதியின்றி மண் அள்ளுவதாக வந்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் திங்கள்கிழமை காலை அங்கு விரைந்து சென்றனா்.
அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் பொக்லைன் மற்றும் டிராக்டா் ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதைத் தொடா்ந்து, தப்பியோடிய மழவங்கரணை கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(45), ஆவணவாடி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (21) ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா்
போலீஸாா், அவா்களைத் தேடி வருகின்றனா்.