செய்திகள் :

ஏரி மண் கடத்தல்: பொக்லைன் இயந்திரம், டிராக்டா் பறிமுதல்

post image

வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளி கடத்த முயன்ாக பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் ஏரியில் சிலா் அனுமதியின்றி மண் அள்ளுவதாக வந்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் திங்கள்கிழமை காலை அங்கு விரைந்து சென்றனா்.

அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் பொக்லைன் மற்றும் டிராக்டா் ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதைத் தொடா்ந்து, தப்பியோடிய மழவங்கரணை கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(45), ஆவணவாடி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (21) ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா்

போலீஸாா், அவா்களைத் தேடி வருகின்றனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க