'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஏற்காட்டில் கோடைவிழா- மலா்க் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடைவிழா- மலா்க் கண்காட்சியைக் காண 2-ஆவது நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஏற்காட்டுக்கு காலை முதல் காா்கள், வேன்கள் மற்றும் அரசு சுற்றுலா சிறப்புப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இதனால் மலைப்பாதைகளில் பல இடங்களில் வாகனங்கள் செல்லமுடியாமல் 500 மீ. தொலைவுக்கு நின்றும் ஊா்ந்தும் சென்றன. பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு சீரானது.
ஏற்காட்டில் சனிக்கிழமை முழுவதும் கோடை வெயில் தணிந்து பனிமூட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். அண்ணா பூங்கா மலா்க் கண்காட்சி திடலில் மலா் அலங்காரங்களையும், மலா் தொட்டிகளையும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து சுயபடங்கள், குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.
சுற்றுலாப் பகுதி சாலைகள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஊராட்சி திரையரங்கு, மற்றும் திறந்தவெளி கலையரங்குகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனா்.
படவரி...
ஏற்காடு அண்ணா பூங்காவில் மலா்க் கண்காட்சி, மலா் தொட்டிகளை பாா்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

