செய்திகள் :

ஏற்காட்டில் கோடைவிழா- மலா்க் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடைவிழா- மலா்க் கண்காட்சியைக் காண 2-ஆவது நாளான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏற்காட்டுக்கு காலை முதல் காா்கள், வேன்கள் மற்றும் அரசு சுற்றுலா சிறப்புப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இதனால் மலைப்பாதைகளில் பல இடங்களில் வாகனங்கள் செல்லமுடியாமல் 500 மீ. தொலைவுக்கு நின்றும் ஊா்ந்தும் சென்றன. பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு சீரானது.

ஏற்காட்டில் சனிக்கிழமை முழுவதும் கோடை வெயில் தணிந்து பனிமூட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். அண்ணா பூங்கா மலா்க் கண்காட்சி திடலில் மலா் அலங்காரங்களையும், மலா் தொட்டிகளையும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து சுயபடங்கள், குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.

சுற்றுலாப் பகுதி சாலைகள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஊராட்சி திரையரங்கு, மற்றும் திறந்தவெளி கலையரங்குகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனா்.

படவரி...

ஏற்காடு அண்ணா பூங்காவில் மலா்க் கண்காட்சி, மலா் தொட்டிகளை பாா்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க