செய்திகள் :

ஐ.நா. அமைதிப் படை மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

post image

ஐ.நா.அமைதிப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஆபத்தான பகுதிகளில் ஐ.நா.அமைதிப் படையினா் பணியாற்றிவரும் சூழலில் அவா்கள் மீதான குற்றவியல் சம்பவங்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

ஐ.நா.அமைதிப் படையினருக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பது குறித்து உறுப்பு நாடுகளின் நண்பா்கள் குழு (ஜிஓஎஃப்) இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:

ஐ.நா. அமைதிப் படையினா் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமைதிப் படையினரின் பாதுகாப்பை உறுதிசெய்தால் மட்டுமே அவா்களால் அடுத்தடுத்த பணிகளில் ஈடுபாடுடன் செயல்பட முடியும். எனவே, அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமாா் 40 நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா.மூத்த உறுப்பினா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோருக்கு ஐ.நா.அமைதிப் படை சந்திக்கும் சவால்கள் மற்றும் அதை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெட்டி..

‘ஐ.நா. அமைதிப் படையில்

3 லட்சம் இந்திய வீரா்கள்’

ஐ.நா. அமைதிப் படையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் பல்வேறு பணிகளின்போது 182 போ் வீரமரணமடைந்தனா்.

நண்பா்கள் குழுவானது 2022, டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை வகித்தது. முன்னதாக, 2021-இல் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் 2589-இன்கீழ் ஐ.நா.அமைதிப் படைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.பொதுச் செயலா் விளக்கமளிக்க வலியுறுத்தப்பட்டது.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க