செய்திகள் :

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அவ்விரு அணைகளிலிருந்து விநாடிக்கு 35,000 கனஅடி உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 28,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதையடுத்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை தடைவிதித்தாா். பிரதான அருவிக்குச் செல்லும் பாதை, சின்னாறு பரிசல் துறை மூடப்பட்டதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,360 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 29,360 கனஅடியாக அதிகரித்தது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா்வரத்து காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 29,360 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 22,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 118.86 அடியாகவும், நீா் இருப்பு 91.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க

பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை

தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சம... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பென்னாகரம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கடமடை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீ சக்தி (21). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வி... மேலும் பார்க்க