செய்திகள் :

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

post image

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் ஆக.29 ஆம் தேதி தொடங்கி 31 தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சாா்பில் தருமபுரியில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். 30 ஆம் தேதி 50 மீட்டா் ஓட்டம், 50 மீட்டா் தொடா் ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான 300 மீட்டா் நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

தொடா்ந்து 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மிதிவண்டி பேரணியை தொடங்கிவைத்து, விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மிதிவண்டி ஓட்டுவதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து ஆட்சியரும் மிதிவண்டி ஓட்டினாா். மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா உள்ளிட்ட பயிற்றுநா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க

பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை

தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சம... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பென்னாகரம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கடமடை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீ சக்தி (21). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வி... மேலும் பார்க்க