செய்திகள் :

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

post image

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் தருமபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் சென்றபோது அவரது கைப்பேசி திருடுபோனது.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை (ஆக.30) ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏறுபள்ளி, இந்திரா காலனியைச் சோ்ந்த ச.அண்புமணி (19) என்பதும், பெங்களூரு சென்ற ரயிலில் செந்தில்வேலனின் கைப்பேசியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க

பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை

தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சம... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பென்னாகரம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கடமடை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீ சக்தி (21). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வி... மேலும் பார்க்க