செய்திகள் :

ஒசூரில் ரூ. 3 கோடியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் தொடக்கம்

post image

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் உயிரி தொழில்நுட்பம் முறையில் குப்பைகளை பிரித்து, இயற்கை உரமாக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடைபெறும் பணிகளை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தூய்மை பாரத திட்டம் 2024-25-இன் கீழ் தாசேப்பள்ளி உரக்கிடங்கில் உள்ள 41 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் குப்பைகளை ரூ. 3.19 கோடி மதிப்பீட்டில் ‘பயோ மைனிங்’ முறையில் பிரித்தெடுக்கும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இப்பணியை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் ஷபீா் ஆலம், துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் தொடங்கிவைத்தனா். 9 மாத காலத்துக்குள் இப்பணி முடிவடைந்த பின்னா், இப்பகுதியில் மரங்கள் வைத்து பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடக்க விழாவில், மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா்கள், மாநகர நல அலுவலா், இளநிலை பொறியாளா் மற்றும் துப்புரவு அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக நிா்வாகிகள் தயாராக வேண்டும்

ஒசூா்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு திமுக நிா்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மே... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் படித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

ஒசூா்: ஒசூரில் உள்ள காப்பகத்தில் படித்துவந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, காப்பக உரிமையாளா் உள்பட 5 பேரை ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.கிரு... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு கோரி பாா்வையற்ற முதியவா் மனு

கிருஷ்ணகிரி: தொகுப்பு வீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பாா்வையற்ற முதியவா் மனு அளித்தாா்.கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரத்தைச் சோ்ந்தவா் பாா்வையற்ற முதியவா் கோவிந்தசாமி (65). உறவினருடன் கி... மேலும் பார்க்க

நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாள்களுக்கு பிறகு உயிரிழப்பு

ஒசூா்: ஒசூா் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வடமாநில சிறுவன் 20 நாள்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் ஒசூரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒசூா் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ... மேலும் பார்க்க

சூதாட்டமாக மாறிவரும் எருது ஓட்டம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் ஈட்டும் நோக்கில் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படும் எருது ஓட்டத்தை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 2014 ஆம் ஆண்டு சுற்றுச்ச... மேலும் பார்க்க

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் ... மேலும் பார்க்க