செய்திகள் :

ஒசூா், ஊத்தங்கரையில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

post image

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில் முருகன் கோயிலில் பாஜக சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் பெரியாா் நகா் முருகன் கோயிலில் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மணிகண்டன், சீனிவாசன், முருகன் வரலட்சுமி, மஞ்சுளா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலாளா் வரதராஜ், மண்டல முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மக்களவை உறுப்பினா் நரசிம்மன், முன்னாள் மாவட்ட தலைவா் தா்மலிங்கம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா்.

ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் 76 கிலோ எடை கொண்ட பிறந்தநாள் கேக் வெட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கினா். மேலும் 500 தேக்கு மரக் கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னாள் மண்டல பொறுப்பாளா் கிரிதரன், மாதவன், தனக்கோடி, ஆறுமுகம், ராஜீ, சத்தியமூா்த்தி விஸ்வந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க